2 அமெரிக்கர்கள், பிரஞ்சு விஞ்ஞானிக்கு வேதியியல் நோபல் பரிசு
Subscribe to Oneindia Tamil
ஸ்டாக்ஹோம்:
இந்த ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசை இரு அமெரிக்கர்களும் ஒரு பிரஞ்சு விஞ்ஞானியும் வென்றுள்ளனர்.
பிரான்ஸைச் சேர்ந்த யுவெஸ் செளவின், அமெரிக்கர்களான ராபர்ட் கிரப்ஸ், ரிச்சர்ட் ஸ்ரோக் ஆகியோருக்கு இந்த விருதுவழங்கப்படுகிறது.புதிய வேதிக் கலவைகளை தயாரிக்கும்போது உருவாகும் ஆபத்து மிக்க ரசாயனக் கழிவுகளைக் கட்டுப்படுத்த இவர்கள்உருவாக்கிய புதிய தொழில்நுட்பத்துக்காகவும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
மருந்துகள் தயாரிப்பிலும், உணவுப் பொருட்கள் பதப்படுத்துவதிலும் இவர்களது கண்டுபிடிப்பு பெரும் உதவிகரமாக இருக்கும்என நோபல் கமிட்டி கூறியுள்ளது.
74 வயதான யுவெஸ் பாரிஸ் அருகே உள்ள பிரஞ்சு ஆய்வுக் கூடத்தில் கெளரவ இயக்குனராக உள்ளார்.
63 வயதான கிரப்ஸ் கலிபோர்னியா தொழிநுட்ப மையத்தில் வேதியியல் பேராசிரியராக உள்ளார்.












Click it and Unblock the Notifications