ரேஷன் வாங்காதோருக்கு நினைவூட்ட போஸ்ட் கார்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புதிய ரேஷன் கார்டு வாங்கத் தவறியவர்களுக்கு அஞ்சல் அட்டை அனுப்பி நினைவுபடுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டு விநியோகம் கடந்த ஜூலை மாதம் முதல் வினியோகிக்பட்டது. இந்த வினியோகம் தாலுகாஅலுவலகங்கள் முலமும் நடந்தது. அப்படி இருந்தும் 500 முதல் 1,000 கார்டுகள் வரை வாங்கப்படாமல் கிடப்பில் உள்ளது.
இந்த நிலையில் கார்டு வாங்காதவர்களுக்கு ரேஷன் கார்டில் உள்ள முகவரிப்படி அஞ்சல் அட்டை அனுப்பி நினைவுபடுத்துமாறுதாலுகா அலுவலகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி அஞ்சல் அட்டைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட தேதிக்குள் வந்து ரேஷன் கார்டுகளை பெற்றுசெல்லும்படியும் தவறினால் கார்டுகள் திருப்பி அனுப்பப்பட்டு விடும் என அதில் கூறப்பட்டுள்ளளது.












Click it and Unblock the Notifications