சென்னையில் மீண்டும் கடல் சீற்றம்: வீடுகளில் புகுந்த நீர்
சென்னை:
சென்னை எண்ணூரில் மீண்டும் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் கடல் நீர் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ளேபுகுந்தது.
கடந்த டிசம்பர் மாதம் 26ந் தேதி தமிழ்நாட்டில் சுனாமி தாக்குதலுக்கு பிறகு கடலில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதனால்தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அடிக்கடி கடல் கொந்தளிப்பு நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது.கடலில் பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் அலைகளின் சீற்றம் அதிகமாக காணப்படுவது வழக்கமே. ஆனால்,சுனாமிக்குப் பின் நீர் தெருக்களில் நுழைய ஆரம்பித்துவிட்டது.
இந் நிலையில் நேற்று முன் தினம் அமாவாசையாதலால் கடல் அலைகள் தொடர்ந்து சீற்றத்துடன் உள்ளன. எண்ணூர் பகுதியில்கடற்கரை ஓரம் போடப்பட்டிருந்த சுற்று சுவரையும் தாண்டி கடல் தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.
அங்குள்ள தாழ்வான வீடுகளுக்குள் கடல் தண்ணீர் புகுந்ததால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இதேபோல்எர்ணாவூர் குப்பம், இந்திரா காந்தி குப்பம் ஆகிய பகுதிகளும் பாதிக்கப்பட்டன.
இதனால் அந்த பகுதி மக்கள் ஒன்று திரண்டு கடற்கரை அருகே இருக்கும் சுற்றுசுவரின் உயரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றகோரிக்கையை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications