For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பதி பிரமோற்சவம்: லட்சக்கணக்கில் பக்தர்கள்

By Staff
Google Oneindia Tamil News

திருப்பதி:

திருப்பதி வெங்கடேஸ்வரர் ஆலய நவராத்திரி பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கோவிலின் தங்க துவஜஸ்தம்பத்தில் கருட கொடி ஏற்றப்பட்டதோடு இந்த 9 நாள் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. பின்னர்சுவாமி பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளினார்.

சுவாமிக்கு போர்த்துவதற்காக ஆந்திர மாநில அரசின் சார்பில் முதல்வர் ராஜசேகர ரெட்டி பட்டு வஸ்திரங்களை வழங்கினார். இந்தவஸ்திரம் கருட சேவை தினத்தன்று இறைவனுக்கு போர்த்தப்படும்.

இந்த ஒன்பது நாள் விழாவின்போது தினமும் காலையிலும் இரவிலும் சுவாமியின் சிலை கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில்பல்வேறு வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இன்று பெருமாள சேஷ வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவந்தார். இரவில் ஊஞ்சல் சேவை நடக்கிறது. அதைத் தொடர்ந்து ஹம்ச வாகனத்தில் சுவாமி உலா வருவார்.

பிரமோற்சவ விழாவின் நிறைவு தினமான 11ம் தேதி தேரோட்டம் நடக்கும். பிரமோற்சவத்தையொட்டி லட்சக்கணக்கானபக்தர்கள் திருப்பதியில் குவிந்துள்ளனர்.

இதையடுத்து திருப்பதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த விழாவையொட்டி 40,000 பேருக்கு அன்னதானம் வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

பெண் நாவிதர்கள் நியமனம்:

இதற்கிடையே ஏழுமலையான் கோயிலில் பெண் பக்தர்களுக்கு மொட்டை அடிக்க பெண் நாவிதர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X