குஷ்பு விவகாரத்தில் விஜயகாந்த்: ஒட்டா-உறவா-பாசமா?- மாஜி எம்பி கேள்வி
சென்னை:
குஷ்பு விவகாரத்தில் விஜயகாந்த் ஒதுங்கிக் கொள்வது ஒட்டா-உறவா-பாசமா என்று தெரியவில்லை எனகாங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான அன்பரசு கூறியுள்ளார்.
முன்னாள் எம்.பியான அன்பரசு இப்போது காங்கிரஸ் கட்சியில் ஓரங்கட்டப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ்தலைவர் பதவியைப் பிடிக்க பல ஆண்டுகளாக அவர் முயன்று வந்தாலும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.இந் நிலையில் கட்சியில் தன்னை நிலை நிறுத்துக் கொள்ள காங்கிரஸ் கண்டுகொள்ளாத குஷ்பு விஷயத்தை இவர்மட்டும் கையில் எடுத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் திருமாவளவனுடன் இணைந்து போராடுவது என அவர் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாகஅன்பரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குஷ்பு தமிழ் பெண்களின் கற்பு பற்றி தவறாக பேசிவிட்டு கவலையின்றி தமிழ்நாட்டில் நடமாடுகிறார். இதேபோன்று வட மாநிலத்துப் பெண்களைப் பற்றி தவறாக பேசிவிட்டு தமிழகத்தைச் சேர்ந்த ஹேமமாலினியால் அங்குநிம்மதியாக இருக்க முடியுமா?
இந்த உணர்வு தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு ஏன் வரவில்லை என்று டெல்லி வாழ் தமிழர்கள் என்னைகேட்கிறார்கள். வட இந்திய பெண்கள் கூட குஷ்பு பேசிய பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.
மன்னிப்பு கேட்டு விட்டால் இந்த பிரச்சினை ஓய்ந்து விடும் என்று குஷ்பு நினைக்கலாம். ஆனால் இந்தபிரச்சினையை தமிழர்களாகிய நாம் சாதாரணமாக நினைத்து விட்டுவிடக்கூடாது. குஷ்புவுக்கு சரியான பாடம்புகட்ட வேண்டும்.
குஷ்பு விவகாரத்தில் விஜயகாந்த் ஒதுங்கிக் கொள்வது ஒட்டா-உறவா-பாசமா தெரியவில்லை.
இந்தப் பிரச்சனை தமிழர்களுக்கு சவால் விடும் பிரச்சினையாக இருப்பதால், குஷ்புவை எதிர்த்து போராட்டம்நடத்தி வரும் தொல். திருமாவளவன் போன்றோருடன் நானும் இணைந்து போராடுவேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications