For Daily Alerts
Just In
நானும் ஒரு விவசாயி: ஜெயலலிதா
சென்னை:
சென்னையில் உழவர் மாநாட்டைத் தொடங்கி வைத்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:
என்னை பொறுத்தவரையில் நான் ஒரு விவசாயி. எந்த படிவத்திலும் உங்களது தொழில் என்ன என்றுகேட்கப்படும் இடத்தில் நான் விவசாயம் என்று தான் குறிப்பிடுவேன். இதை சொல்வதில் பெருமிதம்அடைகிறேன்.நீரிலே முத்தெடுக்காமல் நிலத்திலே முத்தெடுத்து உலகுக்கு உணவளிக்கும் உன்னத தொழில் தான் விவசாயம்.இதை செய்யும் விவசாயிகள் கடவுள் கண்டெடுத்த தொழிலாளிகள்.
கவிதையை என்னைப்போன்ற பாமரர்கள் படைக்க முடியும், ஆனால் மலர்களை ஆண்டவனால் மட்டுமே படைக்கமுடியும் என்றான் வங்கக் கவிஞன் தாகூர்.
அதுபோல ஆயிரமாயிரம் பயிர் செடிகளை படைக்கும் விவசாயிகள் உண்மையில் தெய்வங்கள்.
இன்று நான் அறிவித்துள்ள விவசாய பாதுகாப்பு திட்டம் இந்தியாவிலேயே முதன் முறையாக மேற்கொள்ளப்படும்முழுமையான திட்டம் என்று சொல்வதில் பெருமையடைகிறேன் என்றார் ஜெயலலிதா.
Comments
Story first published: Thursday, October 6, 2005, 5:30 [IST]