ரேடியோ, டிவிக்கு மீண்டும் லைசென்ஸ்!
சென்னை:
பிரசார் பாரதி அமைப்பின் நிதி நிலைமையை சீரமைப்பதற்கு ரேடியோ, தொலைக்கட்சிகளுக்கு மீண்டும் லைசென்ஸ்கட்டணம் வசூலிக்கலாமா என மத்திய அரசு யோசித்து வருகிறது.
இது பற்றி மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி கூறியதாவது:அகில இந்திய வானொலி, தொலைக்காட்சி நிறுவனங்களின் நிதி நிலைமையை சீரமைப்பதற்கு வானொலி,தொலைக்காட்சி பெட்டிகளுக்கு மீண்டும் உரிமக் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த முடியாவிட்டால் டி.வி, வானொலி வாங்குவோரிடம் ஒரு முறையாவது வரிவசூலிக்கலாம் என்று திட்டமிடப்பட்டு உள்ளது.
பொது நிறுவனங்களாகிய பிரசார் பாரதிக்கு ஆகும் செலவை கட்டுபடுத்த மக்கள் பங்களிப்பை பெறுவதில் தவறுஇல்லை. இந்த நடைமுறை இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் அமலில் உள்ளன.
நிதி விவகாரத்தில் தன்னிறைவு பெறும் வரை பிரசார் பாரதிக்கு மத்திய அரசு நிதி உதவி செய்யும். இந்தநிறுவனங்களுக்கு ஆண்டு தோறும் 1,200 கோடி நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது. விளம்பர வருமானம் வந்தாலும்இந்த நிலைமை நீடிக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications