கராத்தே: சென்னை மாநகராட்சி மன்றத்தை கலைக்க அரசு முடிவு?
சென்னை:
துணை மேயர் தியாகராஜன் தலைமறைவாகிவிட்ட நிலையில், சென்னை மாநகராட்சி மன்றத்தையே கலைத்துவிடலாமா என்று தமிழக அரசு யோசித்து வருவதாகத் தெரிகிறது.
போயஸ் தோட்டத்தின் அடுத்த டார்கெட் ஆகிவிட்ட கராத்தேவை துணை மேயர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிதாகத் தேர்தல் நடத்தலாம் என அதிமுக தலைமை முதலில் யோசித்தது.ஆனால், திமுக கூட்டணி கவுன்சிலர்களுடன் சுயேச்சைகளும் அதிருப்தி அதிமுக கவுன்சிலர்களும் கராத்தே ஆதரவு கவுன்சிலர்களும் கைகோர்த்துவிட்டால் அதிமுக தரப்பில் நிறுத்தப்படுபவர் வெல்வது கடினம் என்று தெரிய வந்துள்ளது.
அதிமுகவுக்கு வெற்றி நிச்சயமில்லை என்ற நிலையில் கராத்தேவைத் தூக்கிவிட்டு அந்தப் பதவிக்கு புதிதாக தேர்தல் நடத்தும் தைரியத்தில் அரசு இல்லை என்று தெரிகிறது.
இதையடுத்து மாநகராட்சி மன்றத்தையே கலைத்துவிடலாமா என்று அதிமுக தலைமை யோசித்து வருவதாக தகவல்கள் வருகின்றன. பெரும்பலான கவுன்சிலர்களும் அதிகாரிகளும் மாநகராட்சி மன்றம் கலைக்கப்படலாம் என்றே கருதுகின்றனர்.
அதிமுகவின் வசம் உள்ள சென்னை மாநகராட்சிக் கலைக்கப்படும் என்ற தகவலால் திமுக பெரும் மகிழ்ச்சியில் உள்ளது.












Click it and Unblock the Notifications