மதுரையில் உ..பி. கொள்ளையர்கள் 3 பேர் கைது: நகைகள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் வியாபாரியிடம் இருந்து நகைப் பெட்டியைப் பறித்துக் கொண்டு ஓடிய உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேரைபோலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 40 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.பகல் நேரங்களில் வீடுகளில் துணி விற்பது மாதிரி வந்து நோட்டம் பார்க்கும் இவர்கள் இரவில் அந்த வீடுகளில் கொள்ளைஅடித்து வந்துள்ளனர்.
இந் நிலையில் கடந்த மாதம் சென்னையில் இருந்து மதுரைக்கு பஸ்சில் வந்த ஒரு வியாபாரியை இந்த மூவரும் பிடித்துச்சென்றனர். ஒரு இடத்தில் வைத்து அவரது பெட்டியைப் பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர். அதில் நகைகள் இருந்தன.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் 3 பேரையும் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 40 பவுன் நகை மீட்கப்பட்டது.












Click it and Unblock the Notifications