கர்நாடகம் விடுவிக்கும் காவிரி நீரை அளவிட சாப்ட்வேர்!
Subscribe to Oneindia Tamil
மேட்டுர்:
கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்குத் திறந்துவிடப்படும் நீரை துல்லியமாக அளவிட புதிய சாப்ட்வேர்உருவாக்கப்பட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பின்படி கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர்தமிழக எல்லையான பில்லிகுண்டுவில் உள்ள நீர் அளவு மையத்தில் கணக்கிடப்படுகிறது.இந்த கணக்கீட்டு முறையில் இரு மாநிலங்களுக்கிடையே மாறுபட்ட கருத்து நிலவுகிறது.
எனவே இந்த நீர் வரத்தை கம்ப்யூட்டர் உதவியுடன் துல்லியமாக கணக்கிட புதிய சாப்ட்வேர்உருவாக்க்பபட்டுள்ளது. இந்த சாப்ட்வேரை நடைமுறைபடுத்த ஆய்வு பணி நடந்து வருகிறது.
இதற்காக மத்திய நீர்வளத்துறையின் குழு மேட்டூர் வந்துள்ளது. இவர்கள் மேட்டூர் மற்றும் கர்நாடககிருஷ்ணராஜசாகர் அணைகளைப் பார்வையிட்டு தங்களது ஆய்வறிக்கையை 6 மாதங்களில் சமர்ப்பிப்பார்கள்.
இதன் பின்னர் சாப்ட்வேர் உதவியுடன் கர்நாடகம் விடுவிக்கும் நீரின் அளவு துல்லியமாக கணக்கிடப்படும்.












Click it and Unblock the Notifications