ஹைதராபாத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை மையம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சுனாமி மற்றும் இயற்கை சீற்றங்கள் குறித்த முன்னெச்சரிக்கை செய்ய ஹைதராபாத்தில் புதிய அறிவிப்பு மையம்அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
2007ம் ஆண்டு செப்டம்பரில் இது செயல்படத் தொடங்கும்.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் நடந்த பொருளாதார வெளியுறவுத்துறை அமைச்சர்கள்கூட்டத்தில் இந்த முன்னெச்சரிக்கை மையம் அமைப்பதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ரு. 125 கோடி செலவில் ஹைதராபாத்தில் இந்த மையம் அமைக்கப்படும். இந்திய தேசிய கடல் தகவல் மையம்என்ற பெயரில் உருவாக்கப்படும் இந்த மையம் நாட்டின் கடற்கரைகளில் இருந்து 100 கி.மீ. சுற்றளவில் கடலில்ஏற்படும் இயற்கை மாற்றங்களை 5 நிமிடங்களில் தெரிவிக்கும்.
ஏற்கனவே இது போன்ற மையங்கள் ஜப்பான் மற்றும் சிலி ஆகிய நாடுகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications