திருத்தப்படுகிறது இந்திய போலீஸ் சட்டம்
டெல்லி:
இந்திய போலீஸ் சட்டத்தை திருத்த புதிய மசோதா கொண்டு வரப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில்மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல் கூறியுள்ளார்.
மாநில காவல்துறை டிஐஜிகள் 3 நாள் மாநாட்டில் கலந்து கொண்ட சிவராஜ் பட்டீல் பேசியதாவதுஇந்தியாவில் சத்தீஷ்கர், பீகார், ஜார்கண்ட், மராட்டியம், ஆந்திரா போன்ற மாநிலங்கள் உள்பட 13 மாநிலங்கள்இந்திய மாவோயிஸ்ட், நக்சலைட்டு தீவிரவாத இயக்கத்தால் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.
தீவிரவாத இயக்கங்கள் மீது கடுமையான போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும். நக்சலைட்டு இயக்கம் உள்நாட்டுபாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தானது என்பதை கருத்தில் கொண்டு தீவிரவாதத்தை அடக்க கடும் நடவடிக்கைஎடுக்கப்படும்.
தற்போது நடைமுறையில் இருந்து வரும் போலீஸ் சட்டம் 150 ஆண்டுகளுக்கு முந்தியது ஆகும். இதை மாற்றிஅமைக்க வேண்டியது அவசியமாகும். இது பற்றி ஆய்வு நடத்தி அரசுக்க அறிக்கை தாக்கல் செய்ய நிபுணர் குழுஅமைக்கப்படும்.
இவர்கள் தரும் அறிக்கையை அடிப்படையாக கொண்டு போலீஸ் சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில்தாக்கல் செய்யப்படும்.
இதேபோல் காவல் துறை பணியாளர் தேர்வுக்கான விதிமுறைகளும் மாற்றப்படும் என்றார் பாட்டீல்.












Click it and Unblock the Notifications