இந்த ஆண்டும் அரசே நெல் கொள்முதல்: ஜெ. அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விவசாயிகளிடம் இருந்து நெல்லை நேரடியாக வாங்குவதற்கு இந்த ஆண்டும் நெல் கொள்முதல் நிலையங்கள்திறக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழக விவசாயிகளின் நலன் கருதி 2002 ம் ஆண்டு முதல் அமலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்படிதமிழ்நாடு நுகர்பொருள் வாணிகக் கழகத்தால் தொடர்ந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு தமிழ் நாட்டிலுள்ள அனைத்து நீர் தேக்கங்களிலும் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால்பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆண்டும் நெல் உற்பத்தி அதிக அளவில்இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டும் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள்திறக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதில் ஏ ரக நெல் மூட்டை ரூ. 600க்கும், சாதாரண நெல் ரூ. 570க்கும் கொள்முதல் செய்யப்படும் எனஅறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications