பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்ட சோனியா, பிரதமர்
சண்டீகர்:
வட இந்தியாவைத் தாக்கிய நிலநடுக்கத்தால் காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பங்கேற்ற காங்கிரஸ்முதல்வர்கள் கூட்டம் பாதிக்கப்பட்டது.
சண்டீகரில் நேற்று முதல் நடந்து வரும் இக் கூட்டத்தில் சோனியா, மன்மோகன் சிங் உள்பட காங்கிரஸ் ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த 15முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.பஞ்சாப் பவனில் நடந்து வரும் இந்த மாநாட்டில் இன்று காலை பிரதமர் உரையாற்றி முடித்துவிட்டு 9.22 மணிக்கு தனது இருக்கைக்குத்திரும்பியபோது நில நடுக்கம் தாக்கியது. இதையடுத்து சோனியாவையும் பிரதமரையும் அதிகாரிகள் உடனடியாக அந்த கட்டடத்தில்இருந்து வெளியே கொண்டு சென்றனர்.
திறந்த வெளியில் நிறுத்தி வைக்கப்பட்ட அவர்கள், நில நடுக்கம் நின்ற பின், சில நிமிடங்களில் உள்ளே அழைத்துச் சென்றனர். இதையடுத்துமீண்டும் கூட்டம் தொடங்கியது.
ஆனால், நில நடுக்கத்தையடுத்து அனைத்து மாநில முதல்வர்களையும் தங்களது மாநிலங்களுக்கு விரையுமாறு சோனியா உத்தரவிட்டார்.
அதே போல உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் அங்கிருந்தபடியே டெல்லியில் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நில நடுக்க மீட்புப்பணிகளை ஒருங்கிணைக்க உயர் அதிகாரிகள் கொண்ட செல்லை அமைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications