சென்னை, குமரியில் தொடரும் கடல் கொந்தளிப்பு: படகு போக்குவரத்து நிறுத்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை, குமரியில் தொடர்ந்து கடல் கொந்தளிப்பு ஏற்பட்ட வண்ணம் உள்ளது.

சென்னையில் எண்ணூர், திருவொற்றியூர் கடலோர பகுதிகளில் இன்று 6வது நாளாக கடல் கொந்தளிப்பு எற்பட்டுஅலைகள் ஆக்ரோஷமாக வந்து கரையில் மோதின. இந்திரா காந்தி குப்பத்தில்ல தடுப்பு சுவர்களையும் தாண்டிகடல் தண்ணீர் ஊருக்குள் புகுந்து வருகிறது.

இதனால் இங்கு வாழும் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அன்னை சிவகாமி நகர் உள்படபல்வேறு கடலோரப் பகுதி மக்கள் சமுதாய நலக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடரும் கடல் கொந்தளிப்பால் பல மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.

கடல் கொந்தளிப்பால் ஊருக்குள் புகுந்த தண்ணீரை திருவொற்றியூர் நகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.

அதே போல கன்னியாகுமரியிலும் இரண்டாவது நாளாக கடலில் கொந்தளிப்பு காணப்படுகிறது. நேற்றுகொந்தளிப்பு மிக அதிகமாக இருந்ததால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.

இன்றும் அலைகள் மிக வேகத்தில் வீசி வருகின்றன. இதனால் படகு போக்குவரத்து இன்றும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 3 படகுகளை அலைகள் கவிழ்த்தியடித்தன. இதையடுத்து அந்த மீனவர்கள்பத்திரமாக நீந்தி கரைசேர்ந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+