நாங்கள் அனைவரும் ஒரே குடும்பம்: தெண்டுல்கர்
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக, ஒற்றுமையாக உள்ளோம் என்று தெண்டுல்கர்கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் கிரேக் சேப்பல், கேப்டன் கங்குலி இடையே மோதல் எற்பட்டு இருரையும்கிரிக்கெட் வாரியம் அழைத்து பேசியது. இதில் சமரசம் ஏற்பட்டது.இந் நிலையில் இந்திய அணி இந்த மாத இறுதியில் இலங்கை அணியுடன் மோத உள்ளது.
இச் சூழலில் வீரர் சச்சின் தெண்டுல்கர் மும்பையில் நிருபர்களிடம் பேசுகையில்,
இந்திய அணி வீரர்களும், பயிற்சியாளர் சேப்பலும் ஒன்றாக உள்ளனர். இந்த ஒற்றுமை வரும் காலங்களிலும்தொடரும். அணியினர் ஒரே குடும்பம் போல் உள்ளனர். குடும்ப உறுப்பினர்களில் கருத்து வேறுபாடு இருப்பதுஇயல்பு.
அதற்காக அணியில் ஒற்றுமை இல்லை என்று கூற முடியாது. எல்லா வீரர்களும் அணியின் வெற்றியையேவிரும்புகிறார்கள். அணிக்கு ஒரு நிரந்தரமான மானேஜர் தேவை. அவர் வீரர்களின் பேச்சை அறிந்துகொள்வதுடன், தவறான செய்தி வருவதையும் தடுக்க முடியும்.
என் உடல் நலம் நன்றாக தேறியுள்ளது. இனி வரும் போட்டிகளில் நான் கலந்து கொண்டு விளையாடுவேன்என்றார்.












Click it and Unblock the Notifications