வள்ளுவரை கிண்டலடித்த எஸ்.எஸ்.சந்திரன்
சென்னை:
திருவள்ளுவர் சிலையை பற்றி கேவலமாக பேசிய அதிமுக எம்பி எஸ்.எஸ்.சந்திரனுக்கு கடும் கண்டனம்தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய எஸ்.எஸ். சந்திரன் வழக்கமான தனது பாணியில், வாயை கோணலாக்கிக் கொண்டுதிருவள்ளுவர் சிலையை கிண்டலடித்துப் பேசினார்.அவர் கூறுகையில், கன்னியாகுமரியில் இடுப்பை வளைச்சுகிட்டு திருவள்ளுவர் சிலை இருக்கு. அந்த சிலையைபார்க்கிற வெளிநாட்டுக்காரன், " இதென்ன அனுமார் சிலையா? வாலைக் காணோமே என்று கேட்பான் என்றார்.
எஸ்.எஸ்.சந்திரனின் இந்த நாற வாய் பேச்சுக்கு கடும் கண்டனம் கிளம்பியுள்ளது.
முன்னாள் துணை வேந்தர் க.ப. அறவாணன் கூறுகையில், தமிழ் இன, மொழி இல்லாதவர்கள் தான் வள்ளுவரைகிண்டல் செய்வார்கள். இது நச்சுப்பிரச்சாரம் என்றார்.
கவிஞர் மு.மேத்தா கூறுகையில், குரங்குகள் மலர்களை பற்றி பேசக்கூடாது. திருவள்ளுவரை பற்றி பேசுவதற்குசமூக யோக்கியதை வேண்டும். எஸ்.எஸ்.சந்திரன் மன்னிப்பு கோர வேண்டும் என்றார்.
கவிஞர் அறிவுமதி கூறுகையில், ஒரு குடிகார மகன் உச்ச போதையில் தன் தாயின் முகத்தில் காறித் துப்பியதற்குசமமானது இந்த எச்சில் வார்த்தைகள் என்றார் வேதனையுடன்.
நாய் வால் நிமிருமா?, எஸ்.எஸ்.சந்திரன் திருந்துவாரா?












Click it and Unblock the Notifications