For Daily Alerts
Just In
அலுவலகங்களில் செக்ஸ் தொல்லை: பெண்களுக்கு பாதுகாப்பு தர புதிய சட்டம்
டெல்லி:
வேலை செய்யும் இடங்களில் செக்ஸ் தொல்லைகளில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வகை செய்யும் சட்டம்நாடாளுமன்றத்த்ல் தாக்கல் செய்யப்படுகிறது.
அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்களில் சிலர் செக்ஸ் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் நடைபெறுகிறது. எனவேபெண்களுக்கு பாகாப்பு அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தேசிய பெண்கள் கமிஷன் மத்திய அரசை வற்புறுத்தி வந்தது.
இதை தொடர்ந்து இதற்கான மசோதா தயாரிக்கப்பட்டு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் உள்ள சட்டநுணுக்கங்களை பிரபல பெண் வக்கீல் இந்திரா ஜெய்சிங் ஆய்வு செய்து திருத்தங்களைச் செய்துள்ளார்.
இந்த மசோதா வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கலாகிறது.
Comments
Story first published: Saturday, October 8, 2005, 5:30 [IST]