For Quick Alerts
For Daily Alerts
Just In
மின் கட்டண உயர்வால் மில்களுக்கு பாதிப்பு
கோயம்பத்தூர்:
மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில் துறையினருக்கு பல பிரச்சினைகளை உருவாக்குகிறது என்பதுஉண்மைதான் என்று மத்திய ஜவுளி அமைச்சக இணைச் செயலாளர் கதிர்தராய் தெரிவித்தார்.
தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி மையத்தின் 30வது தொழில் கருத்தரங்கு விழாவில் கலந்து கொண்டு அவர்பேசியதாவதுஇந்தியாவில் ஜவுளி மில்களுக்கு மின் கட்டணம் கூடுதலாக உள்ளது. இதனால் மில்களுக்கு பல பிரச்சினைகள்ஏற்படுவது உண்மை.
நவீன எந்திரங்களால் மின் சார உற்பத்திக்கு கூடுதல் செலவாகிறது. எனவே நாமும் மின்சாரத்தை அதிக விலைக்குவாங்க வேண்டியுள்ளது. மின் கட்டணம் குறித்து விரைவில் மத்திய அரசு புதிய முடிவெடுக்கும்.
சீனா போன்ற நாடுகளில் ஒரு யூனிட் மின்சாரம் ஒரு ரூபாய்க்கு கிடைக்கும் நிலையில் நாம் ஒரு யூனிட்மின்சாரத்தை ரூ. 4க்கு வாங்கி அதை பயன்படுத்துகிறோம். இதனால் உற்பத்தி செலவு அதிகரிக்கிறது என்றார்.
Comments
Story first published: Sunday, October 9, 2005, 5:30 [IST]