காஷ்மீரில் 320 பேர் பலி: டெல்லி, பஞ்சாபில் 4 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
ஜம்மூ:
வட இந்தியாவைக் குலுக்கிய பயங்கர நிலநடுக்கத்துக்கு காஷ்மீரில் 320 பேர் பலியாகியுள்ளனர். டெல்லியில் 2 பேர்உயிரிழந்துள்ளனர், பஞ்சாபிலும் 2 பேர் இறந்தனர்.
ஜம்மூ-காஷ்மீரில் பல கிராமங்கள் இருந்த அடையாளம் இல்லாத அளவுக்கு அழிந்து போய்விட்டன. ஆயிரக்கணக்கானகட்டடங்கள் இடிந்ததில் 320 பேர் பலியாயினர். இதில் 30க்கும் மேற்பட்டவர்கள் இந்திய ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப்படையினர் ஆவர்.குப்வாரா மாவட்டத்தில் 157 பேரும், பாரமுல்லாவில் 139 பேரும், ஜம்மூவில் 18 பேரும் பலியாகியுள்ளனர்.
தெற்கு டெல்லியில் தியோலி கிராமத்தில் கட்டடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் பலியானார். அதே பகுதியில் ஒருசுவர் இடிந்து விழுந்து பெண் பலியானார். இதே போல பஞ்சாபிலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே இன்று அதிகாலையும் காஷ்மீரில் சிறிய நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதையடுத்து மக்கள் அலறியபடி வீடுகளைவிட்டு ஓடி வந்தனர்.
காஷ்மீரில் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ராணுவம் அதற்கு ஆபரேசன் இமாத் என பெயரிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications