நிலநடுக்கத்துக்கு பாகிஸ்தானில் 30,000 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

நேற்று ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பத்துக்கு பாகிஸ்தானில் மட்டும் 30,000 பேர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது. இதில் 25,000சாவுகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடந்திருப்பதாக அந்நாட்டு தனியார் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இறந்தவர்களில் 200க்கும் மேற்பட்டவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஆவர். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இவர்கள்பலியாகியுள்ளனர். இங்கு பெரும்பாலான கிராமங்கள் இடிந்து தரைமட்டமாகிவிட்டன.

இந்த நில நடுக்கத்தால் 55,000 பேர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருவதால்இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே மீட்புப் பணியில் பாகிஸ்தான் ராணுவமும் போலீசாரும் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர். இஸ்லாமாபாத்தில் இடிந்துவிழுந்த 19 மாடிக் கட்டடத்தின் இடிபாடுகளில் இருந்து 82 பேர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணிகளில் பாகிஸ்தானுக்கு உதவ ஐ.நா. தனது குழுவையும் அனுப்பி வைத்துள்ளது.

இதற்கிடையே பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங்,பாகிஸ்தானுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+