உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம்: காஷ்மீருக்கு ரூ. 100 கோடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
காஷ்மீரில் நில நடுக்கத்தால் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றுபிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.
இந்த நிவாரண தொகை பிரதமர் தேசிய நிவாரண நிதியின் கீழ் வழங்கப்படும்.நில நடுக்கத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் முதல்வர் மாநாட்டை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினர் பிரதமரும்காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும்.
இதையடுத்து பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அதில் நில நடுக்கத்தால்ஏற்பட்டுள்ள சேதம் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதில் காஷ்மீருக்கு உடனடியாக ரூ. 100 கோடி நிவாரண உதவி அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் மத்தியஅரசு வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications