For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண்மாய்களில் நீர் மட்டம் திடீர் உயர்வு: பூகம்பத்தின்போது நாகையில் பரவிய சுனாமி பீதி

By Staff
Google Oneindia Tamil News

பொறையார்:

வட இந்தியாவில் நில நடுக்கம் ஏற்பட்டபோது நாகப்பட்டிணத்தில் சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்மாய்கள்,ஊரணிகளில் நீர் மட்டம் திடீரென உயர்ந்தது. மேலும் வெந்நீர் போல நீர் கொப்பளித்ததால் அப் பகுதிகளில் சுனாமி பீதி பரவியது.

நேற்று வட இந்தியாவை உலுக்கிய மாபெரும் நில நடுக்கத்தின் காரணாகவே இந்த நிலவியல் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

கடந்த ஒரு வாரமாக சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடல் நீர் மக்கள் வசிப்பிடங்களுக்குள் நுழைந்து வரும்நிலையில், நாகப்பட்டிணத்தில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை மாற்றத்தால் சுனாமி பயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாக சென்னையின் பல பகுதிகளிலும் கடல் நீர் மீனவர் குப்பங்களுக்குள் புகுந்து வருகிறது. பயங்கர சீற்றத்துடன்பாயும் அலைகள் தடுப்பு சுவர்களையும் தாண்டி வீடுகளுக்குள் புகுந்து வருவதால் வட சென்னையில் பல மீனவர் குப்பங்கள்காலி செய்யப்பட்டுள்ளன.

மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதே போல கன்னியாகுமரி உள்பட தென் பகுதிகளிலும் கடலில்அலைகள் மிகவும் சீற்றத்துடன் உள்ளன. இதனால் கன்னியாகுமரியில் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இங்கும் பலஇடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

திடீரென கடலின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் அப் பகுதியில் அச்சம் நிலவுகிறது.

இந் நிலையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டிணம் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் கண்மாய்களில் நீர் மட்டம் திடீரெனஉயர்ந்தது. வெந்நீர் கொதிப்பது போல கண்மாய்களில் கொப்பளிப்பு ஏற்பட்டது.

வட இந்தியாவில் நில நடுக்கம் ஏற்பட்ட ஒரு மணி நேரத்தில், காலை 11 மணியளவில், இந்த கொப்பளிப்பு ஆரம்பித்தது. நீர்மட்டமும் வெகு வேகமாக உயர்ந்தது. இதனால் சுனாமி தாக்குதல் ஏற்படுமோ என அஞ்சிய மக்கள் கடல் பகுதிகளை விட்டுஓடினர்.

சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த கொப்பளிப்பு பின்னரே அடங்கியது. சுனாமி ஏற்படாது என்பதை மக்களுக்கு புரிய வைக்கவும்,அவர்களது அச்சத்தைப் போக்கவும் நாகப்பட்டிணம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இந்தப் பகுதிகளுக்கு நேரில்சென்றார்.

வட இந்திய நில நடுக்கததால் தான் இது ஏற்பட்டுள்ளதாக மக்களுக்கு விளக்கிய ராதாகிருஷ்ணன், மீனவர்கள் ஒரு நாள்கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார்.

ஆனாலும் அப் பகுதியில் தொடர்ந்து அச்சம் நிலவு வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X