For Daily Alerts
Just In
ஜெ சொத்து குவிப்பு வழக்கு: ஒத்திவைப்பு
பெங்களூர்:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளின் விசாரணை நவம்பர் மாதம் 19ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா தவிர சசிகலா, தினகரன், சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்தையும் மீறி ரூ. 64 கோடி சொத்து சேர்த்தது,இந்தியாவில் பெரிய பணக்காரர்களில் ஒருவராகி லண்டனில் ஹோட்டல் வாங்கியது ஆகிய வழக்குகள் போடப்பட்டுபெங்களூரில் தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா ஆஜராகவில்லை. எனவே இந்த வழக்குவிசாரணையை அடுத்த மாதம் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பச்சாபுரே உத்தரவிட்டார்.
Comments
Story first published: Monday, October 10, 2005, 5:30 [IST]