ஜெயலலிதாவுக்கு அமைதி விருது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதாவுக்கு, இந்திய கிறிஸ்தவ சர்வதேச காங்கிரஸ் என்ற அமைப்பு அமைதி விருதுவழங்கியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள சிகாகோவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்திய கிறிஸ்தவ சர்வதேசகாங்கிரஸ் என்ற அமைப்பு இந்த விருதை வழங்கியுள்ளது. விருது வழங்கும் நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில்முதல்வரின் அறையில் நடந்தது.

இந்திய கிறிஸ்தவ தேவாலயங்களின் தேசிய கவுன்சில் தலைவரான நெல்லையைச் சேர்ந்த பால் டேவிட் இந்தவிருதை முதல்வரிடம் வழங்கினார். இதில் அமெரிக்க அமைப்பைச் சேர்ந்த பெண் பாதிரியார் பிரசன்ன குமாரி,உலகத் தமிழ் இளைஞர்கள் கூட்டமைப்புத் தலைவர் விஜய பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக அரசின், மழை நீர் சேகரிப்புத் திட்டம், சுனாமி மறு சீரமைப்பு நடவடிக்கைகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம், தொட்டில் குழந்தைகள்பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் சிறப்பினை ஆராய்ந்து அவற்றின் மூலம் தமிழகத்தில்மறுமலர்ச்சியை ஏற்படுத்தியமைக்காக பாராட்டி, இந்த அமைதி விருது வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்கஅமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விஜய பிரபாகர் தான் அமெரிக்காவில் ஒரு தெருவுக்கு ஜெயலலிதாவின் பெயரை சூட்டுவதாக முன்புடுபாக்கூர் விட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+