For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மெரீனா குடிகாரர்கள்: பாதுகாப்பு பணியில் தனிப் படைகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மெரீனா கடற்கரையில் குடித்து விட்டு கலாட்டா செய்பவர்களைப் பிடிக்க தனி போலீஸ் படைகள்அமைக்கப்பட்டு அவர்கள் கடற்கரையில் தீவிரக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகின் 2வது அழகிய கடற்கரை என்று பெயர் பெற்றுள்ள மெரீனா கடற்கரை, தனது பெயருக்கேற்ப அழகாகஇல்லாமல் இருந்தது. முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் தற்போது கடற்கரை எழிலுற திகழ்கிறது.பூங்காக்கள் அமைக்கப்பட்டும், கடற்கரை மணல் சுத்தப்படுத்தப்பட்டும் மெரீனா வெள்ளை வெளேரெனகாணப்படுகிறது.

இந்த நிலையில் மெரீனா கடற்கரையில் விளக்கொளி இல்லாத பகுதிகளில் பலர் குடித்து விட்டு கடற்கரைக்குவருவோரிடம் கலாட்டா செய்து ரகளையில் ஈடுபடுவதாக போலீஸாருக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதைத் தொடர்ந்து கடற்கரை மணலில் அமர்ந்து குடித்து விட்டு கலாட்டா செய்பவர்களைப் பிடிக்க போலீஸ்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 8 போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு படையிலும் ஒரு சப் இன்ஸ்பெக்டர் 43 காவலர்கள் இருப்பார்கள். மயிலாப்பூர் துணை ஆணையர்கலியமூர்த்தியின் நேரடிக் கண்காணிப்பில் இந்தப் படைகள் இயங்கும்.

இந்தப் படையினர் தீவிரக் கண்காணிப்பால் கடற்கரையில் அமர்ந்து குடிப்பது, பெண்களைக் கேலி செய்வது,வாகனத் திருட்டில் ஈடுபடுவது போன்ற குற்றங்கள் கட்டுப்படுத்தப்படும் என்று மாநகர காவல்துறை ஆணையர்நடராஜ் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X