திருச்சியில் எம்.ஜி.ஆர். கழக 11வது ஆண்டு விழா
சென்னை:
ஆர்.எம். வீரப்பன் நடத்தி வரும் எம்.ஜி.ஆர். கழக கட்சியின் 11வது ஆண்டு விழா திருச்சியில் வரும் 17ம் தேதிகொண்டாடப்படுகிறது.
இதுதொடர்பாக ஆர்.எம்.வீ. வெளியிட்டுள்ள அறிக்கையில்:1995ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி எம்.ஜி.ஆர். கழகம் உருவான தினம். இதையொட்டி 11வது ஆண்டுவிழாவும், பொதுக் குழுக் கூட்டமும் வருகிற 17ம் தேதி திருச்சி அரிஸ்டோ டைமண்ட் மஹாலில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
அன்று மாலை 6 மணிக்கு 11வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.
இதில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான ஜி.கே.வாசன் (காங்கிரஸ்), எல்.கணேசன்(மதிமுக), ஜி.கே.மணி (பாமக), கே.என்.நேரு (திமுக), வரதராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), தா.பாண்டியன்(இந்திய கம்யூனிஸ்ட்), ராஜ கண்ணப்பன் (மக்கள் தமிழ் தேசம்), காதர் மொஹைதீன் (முஸ்லீம் லீக்), டாக்டர்சேதுராமன் (மூவேந்தர் முன்னேற்றக் கழகம்) ஆகியோர் கலந்து கொண்டு பேசவுள்ளனர்.
கடந்த 10 வருடமாக எம்.ஜி.ஆர் கழகம் சிறப்புற செயல்பட்டு வருகிறது. தமிழக அரசியல் அரங்கில் இது ஒருசிறிய இயக்கமாக கருதப்பட்டாலும், கட்டுக் கோப்பான வலுவுள்ள இயக்கமாக இருந்து வருகிறது.
அரசியலில் என்ன லாபம் கிடைக்கும் என்று எண்ணாமல், திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக்கூட்டணியில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications