டி.வி.எஸ். நிறுவனத்தின் முன்னாள் அதிகாரிகள் கைது
சென்னை:
சென்னை டி.வி.எஸ். நிறுவனத்தின் தொழில்நுட்ப ரகசியங்களை இன்டர்நெட்டில் திருடி விற்றதாக அந்தநிறுவனத்தின் முன்னாள் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆட்டோ மொபைல் உதரி பாகங்கள் தயாரிப்பில் பிரபலமான டி.வி.எஸ் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மற்றும்தொழில்நுட்ப ரகசியங்களை திருடி விற்று, நிறுவனத்தை வீழ்த்துவதற்கான சதித் திட்டம் அம்பலத்துக்கு வந்து,சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.இந்த நிறுவனத்தில் மார்க்கெட்டிங் ஜெனரல் மேனேஜராக பணிபுரிந்த யாதவமூர்த்தி (வயது 52), ஜம்ஷெட்பூர்கிளை மேனேஜராக பணிபுரிந்த ஸ்ரீராம் ஆகிய இருவரும் சேர்ந்து டி.வி.எஸ். நிறுவனத்தின் போட்டி நிறுவனமானஸ்டெர்லிங் டூல்ஸ் நிறுவனத்துக்கு டி.வி.எஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப ரகசியங்களை இன்டெர்நெட்டில் திருடிவிற்றுள்ளனர்.
தற்போது யாதவ மூர்த்தி, ஸ்டெர்லிங் டூல்ஸ் நிறுவனத்தில் துணைத் தலைவராக உள்ளார். ஸ்ரீராம்,விசாகப்பட்டனத்தில் வேலை பார்த்து வருகிறார். இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுடி.வி.எஸ். நிர்வாகம் போலீசில் புகார் கொடுத்தது.
இந்த புகாரின் அடிப்படையில், சென்னை போலீஸ் கமிஷ்னர் நடராஜ், மத்திய குற்றப்பிரிவை சேர்ந்த சைபர்கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இந்த பொலீஸ் தனிப்படை, யாதவமூர்த்தி மற்றும் ஸ்ரீராம் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடிசோதனை மேற்கொண்டு அவர்களிடம் இருந்து டி.வி.எஸ். நிறுவனத்தின் டெண்டர் ஆவணங்களை கைப்பற்றினர்.இதை தொடர்ந்து பொலீசார் இந்த இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். பிறகு நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர்.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து தக்க நடவடிக்கை எடுத்ததற்காக சைபர் கிரைம் பிரிவு உதவி ஆணையர்பாலுவையும் ஆணையர் நட்ராஜ் பாராட்டினார்.












Click it and Unblock the Notifications