ஹைதராபாத் கமிஷனர் அலுவலகத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 2 பேர் பலி
ஹைதராபாத்:
ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 2 போலீஸ்காரர்கள் பலியானார்கள்.
பேகம்பேட்டையில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மர்ம பையுடன் வந்த ஒரு ஆசாமி, அங்குபணியில் இருந்த போலீஸ்காரருடன் சற்று நேரம் பேசிகொண்டு இருந்தார்.சிறிது நேரத்தில் அந்த பையில் இருந்த ஜெலடின் வெடிகுண்டுகள் பயங்கர சப்தத்துடன் வெடித்தது. இதில்பாதுகாப்பு பணியில் இருந்த 2 காவலர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த வெடிகுண்டு விபத்தால் அலுவலகத்தின் ஆஸ்பஸ்டாஸ் கூரை மற்றும் நாற்காலிகளும் சேதமடைந்துள்ளன.உயிரிழந்த 2 காவலர்களில் ஒருவர் போலீஸ் தலைமை காவலர் சத்தியநாராயணா, மற்றொருவர் ஹோம் கார்டுஎன்றும் தெரியவந்துள்ளது.
ஒரு அடையாளம் தெரியாத உடல் கிடப்பதாகவும், அது ஒரு வேளை தற்கொலை படையை சேர்ந்தமனிதவெடிகுண்டாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவ இடத்தை பார்வையிட்ட காவல் துறை இயக்குநர் சுவர்ணஜித் சென், முதலில் அடையாளம் தெரியாத அந்தநபர் யாரென்று கண்டுபிடிக்கப்பட்டால் தான் எந்த முடிவுக்கும் வர முடியும் என்றார்.
இந்த சம்பவத்தால் ஹைதராபாத் நகர் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்புபகுதியின் அருகில் தான் ஆந்திர முதலவர் வீடு, அமெரிக்க தூதரகம் ஆகியவை இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications