சிறுவர் சீர்திருத்த பள்ளியிலிருந்து 9 பேர் எஸ்கேப்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து 9 சிறுவர்கள் ஜன்னல் கம்பியை உடைத்துத் தப்பிவிட்டனர்.
இந்த சீர்திருத்தப் பள்ளியில் பல்வேறு குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்ட 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 20 பேர்தங்கியுள்ளனர்.இவர்களில் 9 பேர் நேற்று இரவு ஜன்னல் கம்பிகளை உடைத்து தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்துத் தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன் பலனாக, மத்திய பேருந்து நிலையத்தில் பதுங்கியிருந்த 5 சிறுவர்கள் போலீஸாரிடம் பிடிபட்டனர். மற்ற 4 பேரையும்தேடும் முயற்சியை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications