இன்டர்போல் உதவியுடன் பிரபாகரனை கைது செய்ய முயற்சி: சிபிஐ இயக்குனர் தகவல்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைஇந்தியாவுக்குக் கொண்டு வர இன்டர்போல் உதவியை சிபிஐ நாடியுள்ளதாக சிபிஐ இயக்குனர் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.மதுரை வந்த மிஸ்ரா செய்தியாளர்களிடம் பேசுகையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான பிரபாகரன்,உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மன் ஆகியோரைக் கைது செய்வதில் தாமதம் நிலவுவது உண்மைதான்.
அவர்கள் இருவரையும் இந்தியாவுக்குக் கொண்டு வர தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இதற்காக இன்டர்போல்உதவியையும் சிபிஐ நாடியுள்ளது.
இதேபோல தாவூத் இப்ராகிமையும் இந்தியாவுக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் மிஸ்ரா.












Click it and Unblock the Notifications