மதுரை: பக்தர்கள் கூட்டத்தில் லாரி புகுந்து 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் பக்தர்கள் கூட்டத்தில் லாரி புகுந்ந்ததில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மதுரை அவனியாபுரம் அருகே உள்ள அய்வத்தனேந்தல் அய்யனார் கோவிலில் புரட்டாசி மாத பொங்கல் விழா புதன்கிழமைகொண்டாடப்பட்டது. இதையொட்டி சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த செளராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர்கோவிலுக்கு வந்தனர்.அவனியாபுரம்-விமான நிலைய சாலையில் அவர்கள் கூட்டமாக நடந்து சென்று கொண்டிருந்தபோது வேகமாக வந்த ஒரு மணல்லாரி பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது. இதில் ராமச்சந்திரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
காயமடைந்தவர்கள் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மகேஸ்வரி, யமுனாராணி, மாலதிஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.












Click it and Unblock the Notifications