நோக்கியா நிறுவனத்தால் 2,000 பேருக்கு வேலை: தயாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே நோக்கியா செல்போன் நிறுவனம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என மத்தியதொலை தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்தார்.
இந்த ஆலையின் கட்டுப்பான பணிகளை பார்வையிட்ட பின்பு அவர் கூறியதாவதுஅடுத் ஆண்டு முதல் இந்நிறுவனத்தின் உற்பத்தி தொடங்கும். இந்த விழாவில் மன்மோகன் சிங், பின்லாந்துநாட்டின் பிரதமர், சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்பார்கள்.
இதுதவிர ப்ளக்ஸ்டிரானிக்ஸ், எரிக்ஸன், மோட்டோரோலா போன்ற பெரிய தொழில் நிறுவனங்கள் சென்னையில்தொழில் தொடங்க உள்ளன.
முதலில் வெளிநாட்டில் இருந்து பாகங்கள் கொண்டு வந்து செல்போன்கள்தயாரிக்கப்படும், பிறகு படிப்படியாக உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும். இந்த தொழிற்சாலைநிறுவப்படுவதால் 2 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications