விஜய்காந்த் கட்சியின் அவைத் தலைவரானார் பண்ருட்டி
சென்னை:
நடிகர் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் அவைத் தலைவராக முன்னாள் அமைச்சர்பண்ருட்டி ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 14ம் தேதி மதுரையில் நடந்த விழாவில் பிறந்தது தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சி.கட்சியின் தலைவராக விஜயகாந்த்தும், பொதுச் செயலாளராக ராமுவசந்தனும் இருப்பார்கள் என அப்போதுஅறிவிக்கப்பட்டது.இந்த நிலையில் கட்சியின் நிர்வாகிகள் பட்டியலை ராமு வசந்தன் வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:
பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சியின் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொருளாளராக ஆர். சுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில துணை செயலாளராக பார்த்தசாரதி, மாநிலதலைமை நிலைய செயலாளராக அனகை முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக ஈரோடு வி.சி.சந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவரே ஈரோடுமாவட்டத் தலைவராகவும் இருப்பார். மணிமாறன் வழக்கறிஞர் பிரிவு தலைவராக செயல்படுவார்.
தேர்தல் ஆணையம் பரிசீலனை:
இதற்கிடையே விஜயகாந்த்தின் கட்சியின் பெயரை பதிவு செய்வது குறித்து நவம்பர் மாத இறுதியில் தேர்தல்ஆணையம் பரிசீலனை செய்யும் எனத் தெரிகிறது.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியை முறைப்படி பதிவு செய்வதற்காக இந்த மாத தொடக்கத்தில் டெல்லிசென்றார்.
அங்கு தேர்தல் ஆணையத்தில் கடந்த 7ம் தேதி கட்சியைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்துகொடுத்தார்.