சுனாமியில் இறந்த சிறுமியின் எலும்புக் கூடு மீட்பு
சென்னை:
கடந்த டிசம்பர் மாதம் சுனாமி அலைத் தாக்குதலில் பலியான சிறுமியின் எலும்புக் கூடு 10 மாதங்களுக்குப் பிறகுசென்னையில் மீட்கப்பட்டுள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளை கடந்த ஆண்டு சுனாமி அலைகள் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தின. இதில்ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.இந்த சுனாமி அலை தாக்குதலில் சிக்கியவர்களில் சென்னை புது வண்ணாரப்பேட்டை, மீனவர் குடியிருப்பைசேர்ந்த ஆறுமுகம் என்பவரின் வீடும் ஒன்று.
கடல் நீரில் அடித்து செல்லப்பட்ட ஆறுமுகம், அவரது மனைவி சுமதி, 3 மகன்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.ஆனால் மகள் அனுஷியா (வயது 8) மட்டும் மீட்கப்படவில்லை.
அனுஷியா என்ன ஆனாள் என்பது தெரியாமல் இருந்து வந்தது. அனுஷியா காணாமல் போனது தொடர்பாககாசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் சுமதி புகார் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் காசிமேடு துறைமுக கடலோரத்தில், முருகேசன் என்பவர் சுனாமியால் சேதமடைந்து கடந்த 10மாதங்களாக கரையிலேயே கிடந்த படகை சீர்படுத்துவதற்காக சென்றார்.
அப்போது படகுக்கு கீழே ஒரு எலும்புக் கூடு கிடப்பதைப் பார்த்தார். அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக காவல்நிலையத்தில் தகவல் கொடுத்தார்.
போலீஸார் விரைந்து வந்து எலும்புக் கூட்டை மீட்டு விசாரணை நடத்தினர். அந்த எலும்புக் கூடு சிறுவர்களின்உடல் அமைப்பைக் கொண்டிருந்ததால், காணாமல் போன சிறுவர், சிறுமியர் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இதில் அனுஷியா குறித்து விவரம் தெரிந்தது. இதைத் தொடர்ந்து அவரது பெற்றோர் வரவழைக்கப்பட்டு எலும்புகூட்டின் மீது இருந்த உடைகளை வைத்து அடையாளம் காட்ட கூறினர்.
இதைப் பார்த்த சுமதி, தனது மகளின் உடைதான் அது என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து எலும்புக் கூட்டை பரிசோதனை செய்வதற்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு போலீஸார்அனுப்பி வைத்தனர்.
அது அனுஷியாவின் எலும்புக் கூடுதான் என்பது உறுதியானால் எலும்புக் கூடு அனுஷியாவின் பெற்றோரிடம்ஒப்படைக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.