சென்னை கிட்டங்கியில் வெடி விபத்து: 2 பேர் பலி- 5 பேர் கதி என்ன?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியில் பழைய தகரப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கிட்டங்கியில் ஏற்பட்ட வெடி விபத்தில்அருகில் இருந்த குடிசைப் பகுதியைச் சேர்ந்த 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 5 பேரின் நிலை என்னவென்றுதெரியவில்லை.
ஜாபர்கான்பேட்டை அம்மன் தெருவில் பழைய தகரப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கிட்டங்கி உள்ளது. இங்கு இன்று காலைதிடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.இதில் அந்தக் கட்டடமே இடிந்து தரைமட்டமானது. அந்த அளவுக்கு அந்த வெடியின் தாக்கம் இருந்தது.
இதில் கட்டடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து அருகில் இருந்த குடிசைகள் மீது விழுந்தது.
இதில் 5 குழந்தைகள், 2 பெரியவர்கள் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் மற்றும்காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு 2 பேரின் உடல்களை மீட்டனர். மற்றவர்கள் கதி என்ன என்று தெரியவில்லை.
தகரக் கிட்டங்கியில் எதற்காக வெடி பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications