ஆடிட்டர் வழக்கு: ஜெயேந்திரருக்கு நீதிமன்றம் கண்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கில் வரும் 27ம் தேதி ஜெயேந்திரர் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று சென்னை முதலாவதுகூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் சங்கர மட பக்தரான ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கு சென்னை முதலாவது கூடுதல்செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று நீதிபதி செல்வக்குமார் முன்னியிைல் விசாரணைக்கு வந்தது.அப்போது ஜெயேந்திரர், விஜயேந்திரர் தவிர மற்ற அனைவரும் ஆஜராகியிருந்தனர்.
ஜெயேந்திரர், விஜயேந்திரர் சார்பில் அவர்களது வழக்கறிஞர் தினகர் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், ஜெயேந்திரருக்கு உடல் நலம் சரியில்லை. ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். எனவே நேரில்ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
ஆனால் அந்த மனுவை இன்றைக்கு மட்டும் ஏற்பதாக தெரிவித்த நீதிபதி வரும் 27ம் தேதி இருவரும் கண்டிப்பாக ஆஜராகவேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்து விசாரணையை 27ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications