பெண் போலீஸிடம் ஆபாச சைகை: 2 குழந்தைகளுக்கு அப்பா கைது
சென்னை:
சென்னை கொரட்டூர் ரெயில் நிலையத்தில், மாறு வேடத்தில் இருந்த பெண் காவலரிடம் தனது மர்ம உறுப்பைகாட்டி ஆபாசமாக நடந்து கொண்ட நபரை போலீஸார் கைது செய்தனர்.
கொரட்டூர் ரெயில் நிலையத்திற்கு வரும் கல்லூரி, பள்ளி மாணவிகளிடம் அதிக அளவில் ஈவ் டீசிங் நடப்பதாகபோலீஸாருக்கு புகார்கள் வந்தன.இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சர்தார் தலைமையில், 5 பெண் காவலர்கள், 5 ஆண் காவலர்கள் அடங்கியதனிப்படை அமைக்கப்பட்டது. இந்த போலீஸ் படை, மாறு வேடத்தில் கொரட்டூர் ரெயில் நிலையத்தில் தினசரிரோந்து சென்றது.
புதன்கிழமை மாலை போலீஸார் மாறு வேடத்தில் ரெயில் நிலையத்தில் உலவிக் கொண்டிருந்தனர். அப்போதுபெண் காவலர் ஒருவரிடம், லுங்கி கட்டிய நடுத்தர வயது நபர் ஒருவர் வந்தார்.
அவர் ஆபாச சைகை காட்டி அந்த பெண் காவலருக்கு அதிர்ச்சியூட்டினார். இதையடுத்து அருகில் நின்றுகொண்டிருந்த மற்ற காவலர்கள் அந்த நபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அந்த நபர் கொரட்டூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், திருமணமாகி 2 குழந்தைகள்உள்ளதும் தெரியவந்தது.
தொடர்ந்து இதுபோல ஈவ் டீசிங் மற்றும் ஆபாசமாக நடந்து கொள்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என போலீஸார் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications