பிரம்மோற்சவம்: திருப்பதி கோவிலுக்கு ரூ. 9 கோடி வருமானம்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி:

திருப்பதியில் நடந்த 9 நாள் பிரம்மோற்சவ விழாவில் ரூ. 9 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 4ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடந்தது. இந்தவிழாவில் நாடு முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பிரம்மோற்சவம் முடிந்ததும் கோவில் அறக்கட்டளை நிர்வாக அதிகாரி நாராயண சர்மா கூறியதாவது

பிரம்மோற்சவ விழாவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொண்டனர். 9நாட்களில் 4.71 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு 3.53 லட்சம் பேர் தரிசனம்செய்தனர்.

திருப்பதி கோவில் வரலாற்றில் வருமானத்திலும் இந்த ஆண்டு சாதனை படைத்துள்ளது. இதில் உண்டியல்வருமானம் மூலம் ரூ. 6.34 கோடியும், தரிசன டிக்கெட் விற்பனை மூலம் ரூ. 1.49 கோடியும், லட்டு விற்பனை மூலம்ரூ. 81.06 லட்சமும் கிடைத்துள்ளது.

நித்திய அன்னதான திட்டத்தின் கீழ் 3.88 லட்சம் பக்தர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர வரிசையில் காத்திருந்த பக்கதர்களுக்கு 2.27 லட்சம் உணவு பொட்டலங்கள் இலவசமாகவழங்கப்பட்டது. கடுமையான கூட்ட நெரிசல் காரணமாக 115 மணி நேரம் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்குகாத்திருக்க வேண்டியிருந்தது என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+