தமிழக சட்டசபைக்கு ஏப்ரலில் தேர்தல்?
டெல்லி:
தமிழகம் உள்ளிட்ட 5 மாதிஞூல சட்டசபைகளுக்கு 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுத் தேர்தல் திடத்த தேர்தல் ஆணையம்தீவிரமாக படீஞூசீலித்து வருவதாகத் தெரிகிறது.
தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், புதுவை, அசாம் ஆகிய மாநில சட்டசபைகளின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டுமுடிவடைகின்றன.இந் நிலையில் சில மாநில சட்டசபைகள் முன்கூட்டியே கலைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த ஐந்துமாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் பொதுத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.
எனவே ஐந்து மாநிலங்களுக்கும் பொதுவான ஒரு தேதியில் தேர்தல் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. அது அனேகமாக ஏப்ரல்மாதக் கடைசி அல்லது மே மாதத் தொடக்கமாக இருக்கக் கூடும் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரத் தகவல்கள்தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபையில் ஆயுட்காலம் மே மாதம் வரை உள்ளது.
ஜனவரி 1ம் தேதி முதல் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. அது முடிய ஒரு மாதம்ஆகலாம். பிப்ரவரி மாதம் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் வினியோகிக்கப்படும்.
மார்ச் மாதம் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வுகள் நடக்கும். எனவே அந்த நேரததில் தேர்தல் நடத்த வேண்டாம் என முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதனால் ஏப்ரல் கடைசி அல்லது மே மாதத்தில் தேர்தல் நடத்தப்படக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
எப்படி இருப்பினும் மே 3வது வாரத்திற்குள் தேர்தல் நடத்தப்பட்டு, தமிழகத்தில் புதிய சட்டசபையும் அமைக்கப்பட்டு விடும்என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications