குஷ்புவுக்கு எதிராக ஒரு வழக்கு தள்ளுபடி
செஞ்சி:
நடிகை குஷ்பு மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பெண்களின் கற்பு குறித்து அவதூறாக பேசிய நடிகை குஷ்புவை தண்டிக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும்25க்கும் மேற்பட்ட நீதிமன்றங்களில் வழக்குகள் போடப்பட்டுள்ளன.அதேபோல, விழுப்புரம் வடக்கு மாவட்ட பாமக செயலாளர் வசுந்தரா தேவி செஞ்சி குற்றவியல் நீதிமன்றத்தில்ஒரு வழக்கு தொடர்ந்தார். கடந்த 5ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்குவந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி ஜீவானந்தம், நடிகை குஷ்பு பத்திரிகைக்கு பேட்டியில் கூறியுள்ளது அவரது சொந்தக்கருத்து. இதனால் சமூகத்தை அவர் புண்படுத்தியுள்ளார் என கருத முடியாது.
மேலும், குஷ்புவின் கருத்தினால் மனுதாரர் எந்த விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை தெளிவாகவிளக்கவில்லை.
இதை தவிர, இந்த விவகாரம் செஞ்சி நீதிமன்ற எல்லைக்குள் நடக்கவில்லை. எனவே மனுதாரரின் மனுவைதள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக வசுந்தரா தேவிதெவித்துள்ளார்.
குஷ்புவுக்கு எதிரான வழக்கு ஒன்று முதல் முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications