For Quick Alerts
For Daily Alerts
Just In
மாணவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். : வாலிபர் கைது
பாண்டிச்சேரி:
செல்போனில் ஒரு மாணவிக்கு 630 ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பிய வாலிபரை கைது செய்ய போலீஸ் சேலம்விரைந்துள்ளது.
புதுச்சேரி பாரதிதாசன் கல்லூரியில் படிக்கும் மாணவி வாலிபர் ஒருவர் செல்போனில் அடிக்கடி ஆபாசதகவல்களை அனுப்பினார். ஒரு வாரத்தில் மட்டும் 630 எஸ்.எம்.எஸ்களை அனுப்பியுள்ளார்.மேலும் அந்த நபர் மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு அவரை திருமணம் செய்து கொள்ளவிரும்புவதாகவும் கூறினார்.
இப்படி அடிக்கடி தொல்லை கொடுத்ததால் அந்த மாணவியின் உறவினர் ஆனந்த்பாபு என்பவர் இது குறித்துபுதுச்சேரி முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
இதை தொடர்ந்து அந்த வாலிபர் பேசிய போன் மற்றும் செல்போன் எண்களை கொண்டு விசாரணை செய்த போதுஅவர் சேலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் என்பது தெரிய வந்தது.
எனவே அவரை கைது செய்வதற்காக புதுச்சேரி போலீசார் சேலம் விரைந்துள்ளனர்.
Comments
Story first published: Saturday, October 15, 2005, 5:30 [IST]