ஜெயலலிதாவின் பாதுகாப்புக்கு பெண் பூனைகள்
டெல்லி:
முதல்வர் ஜெயலலிதா, உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி ஆகியோருக்கு பெண் கருப்புப் பூனை பாதுகாப்பு அளிக்கமத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இசட் வகை பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் முக்கியத் தலைவர்களுக்கு கருப்புப் பூனைப் பாதுகாப்பை மத்திய அரசு அளித்துவருகிறது.ஆண் அதிரடிப்படை வீரர்களைக் கொண்ட இந்த கமாண்டோ படைக்கு கருப்புப் பூனைப் படை (பிளாக் கேட்ஸ்) என்ற செல்லப்பெயர் உண்டு.
முதல் முறையாக பெண் கமாண்டோக்களைக் கொண்ட கருப்புப் பூனைப் படையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த பெண்கமாண்டோக்களுக்கு டெல்லி, தேசிய பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 12 வீராங்கனைகளுக்கு இந்த கமாண்டோ பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு வழங்கப்படுவதைப் போலவேஅனைத்துப் பயிற்சிகளும் இந்தப் பெண் கமாண்டோக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
பயிற்சி முடிந்து பணிக்குத் தயாராக உள்ள இவர்களை, முதல்வர் ஜெயலலிதா, மாயாவதி ஆகியோருக்கு பாதுகாப்பாக அமர்த்தமத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஆண் கமாண்டோக்களுடன் சேர்த்துஇவர்களும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவர்.
விரைவில் இந்த பெண் கருப்புப் பூனை வீராங்கனைகள் சென்னைக்கு வந்து முதல்வரின் பாதுகாப்புப் படையினருடன் சேர்ந்துகொள்ள உள்ளனர்.












Click it and Unblock the Notifications