நாளை அபூர்வ சந்திரகிரகணம்: அபூர்வ சந்திரகிரகணம்
சென்னை:
நாளை மாலை அபூர்வ சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இதை சென்னை உள்ளிட்ட நகரங்களில் பார்க்கலாம்.
சந்திரகிரகணமும், சூரிய கிரகணமும் வழக்கமாக ஆறுமாத இடைவெளியில் வரும். தற்போது ஒரே மாதத்தில்கிரகணங்கள் வருவது குறித்து ஜோதிட, விஞ்ஞான ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 3ம் தேதி அன்று சூரிய கிரகணம் நிகழ்ந்தது. நாளை மாலை (திங்கட்கிழமை) சந்திர கிரகணம் நிகழவுள்ளது.இவ்வாறு இரண்டு கிரகணங்களும் ஒரே மாதத்தில் இதற்கு முன் 180 ஆண்டுகளுக்கு முன்புதான் நிகழ்ந்துள்ளது.
நாளை சந்திர கிரகணம் ரேவதி நட்சத்திரத்தின் மீனம், மேஷ ராசியில் 5வது ஜாமத்தில் நிகழ்கிறது. மாலை 5.04மணிக்கு தொடங்கி 6.03க்கு நிறைவு பெறுகிறது.
திருப்பதி கோவிலில் நாளை மதியம் 12 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை கிரகணத்தை முன்னிட்டுநடைசாற்றப்படுகிறது. இதே போல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் நடை சாற்றப்படுகிறது.
தமிழக முழுவதும் உள்ள முக்கிய கோவில்கள் ஆகம விதிப்படி சந்திர கிரகணத்தை முன்னிட்டு நாளை நடைசாற்றப்படுகிறது.












Click it and Unblock the Notifications