குமுதம் இதழ் எரிப்பு : பா.ம.க எம்.எல்.ஏ. கைது

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை மற்றும் ஈரோட்டில் குமுதம் வார இதழை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

சுனாமி நிவாரண நிதி குறித்து குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ஆந்திராவை சேர்ந்த பத்திரிகையாளர் சுபாஷ்சந்திரன்எழுதியுள்ள கட்டுரையில்,

"ஐயோவென்று அலறி, உலகத்தில் எங்கோ இருக்கிற மனிதாபிமானிகள் கொடுக்கும் பணத்தை, இங்கேபாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படாமலேயே முடக்கி வைப்பது எவ்வளவு பெரிய துரோகம்.

இதில் ஒடுக்கப்பட்ட சமூகமான மீனவ மற்றும் தலித் சமுதாயத்தினருக்கு மத்திய நலத்துறை அமைச்சர் அன்புமணிராமதாஸ் பெரிய துரோகம் செய்து விட்டார்.

அன்புமணி ராமதாஸ் கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சிலுவை சங்கம் சுனாமி நிவாரண நிதியைபயன்படுத்தப்படவேயில்லை என்று கூறியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 250 பாமக தொண்டர்கள் போராட்டத்தில்ஈடுபட்டனர்.

இதில் ஈரோட்டில் பாமக எம்.எல்.ஏ கிருஷ்ணன் தலைமையில் 20 தொண்டர்கள் கூடி குமுதம் இதழ்களைஎரித்தனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதே போல் அந்தியூர், சத்தியமங்கலம், பவானி, கோபி ஆகிய மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகதொண்டர்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+