வீரப்பன் நினைவு தினம்: முத்துலட்சுமியின் புதிய இயக்கம்- தொடங்கி வைக்கும் பழ.நெடுமாறன்
மேட்டூர்:
வீரப்பனின் முதலாமாண்டு நினைவு நாளான 18ம் தேதி தனது புதிய இயக்கத்தை வீரப்பனின் மனைவிமுத்துலட்சுமி தொடங்குகிறார். தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் இந்த அமைப்பை தொடங்கிவைக்கிறார்.
தர்மபுரி அருகே பாடி கிராமத்தில் வைத்து கடந்த ஆண்டு 18ம் தேதி இரவு சந்தனக் கடத்தல் வீரப்பனை தமிழகஅதிரடிப்படையினர் சுட்டுக் கொன்றனர். அவனோடு, நெருங்கிய கூட்டாளிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.வீரப்பன் கொல்லப்பட்டு சில மாதங்கள் அமைதியாக இருந்து வந்த அவனது மனைவி முத்துலட்சுமி,அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட மலை வாழ் மக்களுக்காக புதிய இயக்கம் ஒன்றைத் தொடங்கப் போவதாகஅறிவித்தார்.
இதை தொடர்ந்து மேட்டூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களை வீடு வீடாகசந்தித்து தனது இயக்கத்திற்கு ஆதரவு திரட்டினார்.
இதன் தொடர்ச்சியாக வருகிற 18ம் தேதி வீரப்பனின் முதலாமாண்டு நினைவு நாளன்று தனது இயக்கத்தைதொடங்குகிறார் முத்துலட்சுமி.
முத்துலட்சுமியின் சொந்த ஊரும், வீரப்பன் உடல் புதைக்கப்பட்ட ஊருமான முலக்காடு பகுதியில் தொடக்க விழாநடைபெறுகிறது. இதற்கு முத்துலட்சுமி தலைமை தாங்குகிறார். தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்இயக்கத்தை தொடங்கி வைக்கிறார்.
நிகழ்ச்சியில் கொளத்தூர் மணி, பேராசிரியர் கல்யாணி, புதுவை சுகுமாறன், இயக்குநர் வி.சேகரின் சகோதரர்பார்த்திபன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.
இதற்கிடையே முத்துலட்சுமி தொடங்கும் இயக்கத்திற்கு தடா தங்கவேல் என்பவர் தலைமையில் திரண்டுள்ள ஒருபிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வீரப்பனுக்கு உதவப் போய் அதிரடிப்படையினரால் பல்வேறுகொடுமைகளுக்கு ஆளானவர்கள் இவர்கள்.
முத்துலட்சுமிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 18ம் தேதி கொளத்தூர் பஸ் நிலையம் முன்பு தடா தங்கவேல்தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
வீரப்பன் நினைவு தினம், முத்துலட்சுமியின் இயக்கத் தொடக்க விழா, தடா தங்கவேலின் போராட்டம்ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தர்மபுரி மாவட்டம் முழுவதும் போலீஸார் உஷார் நிலையில்வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications