For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று அதிமுகவின் 34வது ஆண்டு விழா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அதிமுக தோற்றுவிக்கப்பட்டு 34 ஆண்டுகள் ஆனதையொட்டி கட்சித் தலைமையகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முதல்வரும்,அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மாலை அணிவிக்கிறார்.

திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர். கடந்த 1972ம் ஆண்டில் அதிமுகவைத் தோற்றுவித்தார். தற்போது 33ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளது அதிமுக.

இதையொட்டி இன்று காலை சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில்முதல்வர் ஜெயலலிதா தலைமையில் விழா நபைைெறுகிறது.

அந்த வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவிக்கிறார். பின்னர் கட்சிக் கொடியை ஏற்றி வைத்துஅனைவருக்கும் இனிப்புகளை வழங்குகிறார்.

தொடர்ந்து 34வது ஆண்டு விழா மலரை வெளியிடுகிறார். பின்னர் அதிமுகவைச் சேர்ந்த பலருக்கு நிதியுதவிகளை வழங்குகிறார்.

34வது ஆண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் வரும் 23ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அதிமுகவினர் ஏற்பாடுசெய்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X