சிம் கார்டை விழுங்கிய குண்டுவெடிப்பு கைதி

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒரு கைதி,செல்போன் சிம் கார்டை விழுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள கைதிகள் 200க்கும் மேற்பட்டோர் மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த கிச்சான் புகாரி என்பவரும் ஒருவர். திருநெல்வேலி நீதிமன்றத்தில்நிலுவையில் உள்ள கொலை வழக்கு ஒன்றில் ஆஜர்படுத்துவதற்காக புகாரி, சித்திக் அலி, அம்ஜத் அலி ஆகிய 3 பேரையும்கோவையிலிருந்து நெல்லைக்கு போலீஸார் அழைத்துச் செல்ல முடிவு செய்தனர்.

இதற்காக 3 பேரையும் செல்களில் இருந்து வெளியே கொண்டு வந்து சிறை வளாகத்தில் அவர்களை போலீஸார்சோதனையிட்டனர்.

அப்போது கிச்சான் புகாரி தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஏதோ ஒன்றை எடுத்து திடீரென்று வாயில் போட்டு விழுங்கினார்.

இதைப் பார்த்த பதற்றமடைந்த போலீஸார், எதை விழுங்கினாய் என்று புகாரியிடம் கேட்டபோது, மாத்திரை சாப்பிட்டதாக அவர்தெரிவித்தார். ஆனால் போலீஸார் அதை நம்பவில்லை.

இதையடுத்து உடனடியாக அவரை கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதனைகள் செய்யப்பட்டன.

அப்போது அவர் செல்போன் சிம் கார்டை விழுங்கியிருப்பது உறுதியானது.

இச் சம்பவத்தால் மற்ற 2 கைதிகளையும் போலீசார் நெல்லைக்கு அழைத்துச் செல்லாமல் சிறையிலேயே அடைத்தனர்.

கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் பலர் செல்போன் வைத்துள்ளதாக முன்பே புகார்கள் வந்துள்ளன. இதையடுத்துசிறையில் செல்போன்களை செயலிழக்கச் செய்யும் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இருப்பினும் அதையும் மீறி இன்னும் சிலர் செல்போன்களை பயன்படுத்தி வருவது புகாரி விவகாரத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறைக்குள் செல்போன்கள் இருக்கிறதா என்பது குறித்து தீவிர சோதனை நடத்த போலீஸார் முடிவுசெய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+