பாகிஸ்தானில் இன்றும் 2 முறை நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 8ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50,000 மேற்பட்டவர் பலியாகியுள்ளனர். 2 லட்சத்துக்கும்அதிகமானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர்.இந்த சோகத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில் இன்று 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆகவும், 2வது ஏற்பட்ட நிலநடுக்கம் 4.5 ஆகவும்பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து பொது மக்கள் வீடுகளில் இருந்து அலறி அடித்துக் கொண்டுவெளியே ஓடினார்கள்.
ஆனால் எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவலில்லை.












Click it and Unblock the Notifications