For Daily Alerts
Just In
மணிசங்கரை முற்றுகையிட்ட மீனவர்கள்
பூம்புகார்:
தஞ்சை மாவட்டம் பூம்புகார் அருகே மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர அய்யரை முற்றுகையிட்டு மீனவர்களும்,மீனவப் பெண்களும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.பூம்புகார் அருகே உள்ள வாணகி கிராமத்தில் 150 மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்தது.
இதில் மணிசங்கர அய்யர் பங்கேற்று மீனவர்களுக்கு இலவச மீன்பிடி வலைகளை வழங்கினார். அப்போது மீனவர்களும்,பெண்களும் மணிசங்கர அய்யரை நோக்கி வந்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில்இறங்கினர்.
இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. நீண்ட நேரமாக முற்றுகைப் போராட்டம் நடந்ததால், மணிசங்கர அய்யர் காங்கிரஸ்தொண்டர்களால் அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டார்.
Comments
Story first published: Tuesday, October 18, 2005, 5:30 [IST]